Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், ஆதாரம் இருக்கிறது

August 19, 2018
in News, Politics, World
0
புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், ஆதாரம் இருக்கிறது

எல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்தது.

இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் இன்பராஜா இதனை அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர்  வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தனை ஆயுதங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே உள்ளன. இந்த ஆயுத பலத்தை வைத்துக் கொண்டு தான் ஹிஸ்புல்லா, பத்தியுத்தீன் போன்றோர் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் அச்சுறுத்துகின்றனர்.

அத்துடன், கோவிலை உடைத்து பள்ளிவாயல் கட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் ஏன்? அரசாங்கம் மௌனம் காக்கின்றது. காத்தான்குடி,  கிண்ணியா, மூதூர் பிரதேசங்களிலும் இந்த ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினைக்குரியது.

எந்தவொரு அமைச்சருக்கும் எல்.ரி.ரி.ஈ. வர வேண்டும் எனக் கூறமுடியும். இருப்பினும், எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களாக இருந்த எமக்குத் தான் தெரியும், அவ்வாறு ஒன்று நடைபெறாது என்பது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் அமைப்பில் இணைந்தோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பாட்டால், நாம் 12 ஆயிரம் பேரும் இந்நாட்டைப் பாதுகாக்க படையில் இணைவோம். எமக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. இருப்பினும், தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஒர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் இன்பராஜா மேலும் கூறினார்.

Previous Post

லிந்துலை – எல்ஜீன் பகுதியில் மண்சரிவு எச்சரிக்கை: 94 பேர் வௌியேற்றம்

Next Post

கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க ஏற்பாடு

Next Post

கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்யப்படுவதை தடுக்க ஏற்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures