Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய சிங்கள ஊடகவியலாளர் | கோபமடைந்த ரணில்

March 29, 2022
in News, Sri Lanka News
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் பிரதமர் விடுத்த கோரிக்கை

இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை விமர்சித்து இலங்கை பிரதான சிங்கள தொலைகாட்சியின் அறிவிப்பாளர் ஒருவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க  சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்றது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுகளைப் பற்றிப் பேசுகிறது, தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மீதான தடையை நீக்கக் கோருகிறது, இவை சரியா? என அறிவிப்பாளர் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு “தடை செய்யப்பட்ட அமைப்புகள் என்றால் என்ன?” என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அறிவிப்பாளர், விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்ததாக கூறப்படும் அமைப்புகள் என குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையில், அந்த அமைப்புகளில் பல தடை செய்யப்படவில்லை. எங்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடைகளை நீக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது.

இப்போது குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது அவர்கள் அல்ல நீங்கள் தான். இந்த நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது நாம் மீண்டும் இனவாதத்தினை தூண்டுகின்றோம். அது பழைய கதை” என அவர் கூறியுள்ளார்.

இல்லை இல்லை தற்போது ஆங்காங்கே கூறப்படும் விடயங்களையே கூறினேன் என அறிவிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.வேறு விடயங்கள் இல்லாத காரணத்தினால் அந்த விடயங்கள் பேசப்படுகின்றது. இதனால் இனவாதத்தை அல்லது மதவாதத்தை எடுக்கின்றார்கள். இனவாதத்தை சாப்பிட முடியுமா? இனவாதத்தினால் மக்களுக்கு பெட்ரோல் கிடைக்குமா? என் மீதும் பழி சுமத்தப்பட்டது. எனினும் அந்த காலத்தில் வருமானம் இருந்தது, வேலை இருந்தது, உணவு இருந்தது. இந்தப் பொய்யெல்லாம் கூறி தான் இன்று இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

நாங்கள் இனியாவது உண்மையை பேசுவோம். நாட்டை காப்பாற்று, இனத்தை காப்பாற்று, என இனவாத கதைகள் கூறப்பட்டது. சரி அவை அனைத்தையும் விட்டுவிடுவோம். இது தமிழ் மக்களின் நியாயமான கேள்வி. அதனை தீர்க்குமாறே எங்கள் தேரர்களும் கூறுகின்றார்கள்.

இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அல்லது. அப்போது எங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்த பல அமைப்புகள் இந்த அரசாங்கம் வந்த பிறகு தடை செய்யப்பட்டதை நான் அறிவேன். எனவே அதனை நீக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன். அது நியாயம் என்று நினைக்கிறேன். இதன் பின்னணியில் புலிகள் இல்லை, புலிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளனர். குண்டுகள் வெடிக்காது. பயங்கரவாதம் மீண்டும் இங்கு வராது, எனக்குத் தெரியும். சில அமைப்புகளிடம் பணம் இல்லை என ரணில் கூறியுள்ளார்.

பணம் இல்லை என்றால் ஏன் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார் என அறிவிப்பாளர் வினவியுள்ளார். புலம்பெயர் பணம் என்பது தனிநபர்களுக்கானது, அமைப்புக்கள் அல்ல. அந்த அமைப்புகளுக்கு அந்த மக்கள் பணம் கொடுப்பதில்லை. புலம்பெயர் மக்களையும் நாம் அறிவோம்.

அதாவது புலம்பெயர் நாடுகளின் பணம் வந்தால் நன்றாக இருக்கும். நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் இந்த நாட்டிற்கு அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்புக்குரிய சிகிச்சை

Next Post

நீங்கள் அரச ஊழியராக தொடர வேண்டுமா? தாடி அவசியம்! | தாலிபான்களின் புதிய அறிவிப்பு!

Next Post

நீங்கள் அரச ஊழியராக தொடர வேண்டுமா? தாடி அவசியம்! | தாலிபான்களின் புதிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures