Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புலம்பெயர் சமூகத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள செய்தி

March 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு உடன்படுகின்றேன், நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை | ஜனாதிபதி

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் நாடாக முன்னேற்றம் அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகின்ற 2048ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும்.

தேசிய ஒற்றுமை
அவையனைத்தும் பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது. இலங்கையின் இன வேறுபாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்து மற்றும் வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

உள்ளக பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்களுக்கு இடையிலான பல்வகைத் தன்மையை புரிந்து கொள்வதன் மூலமே தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து இலங்கை பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளும்.

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் நாடாக முன்னேற்றம் அடையும். மேற்படி 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் முன் செல்லும்.

எனவே நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்து கொள்ளுமாறு புலம்பெயர் சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Previous Post

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் தேர்தல் | முன்னாள் ஜனாதிபதி

Next Post

தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

Next Post
தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures