2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் புதன்கிழமை (3) இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
மொத்தம் 2,787 பரீட்சை நிலையங்களில், 307,951 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.