Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இலங்கையை சுற்றி கால்நடை பயணத்தை ஆரம்பித்தார் சுகத் பத்திரன

January 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இலங்கையை சுற்றி கால்நடை பயணத்தை ஆரம்பித்தார் சுகத் பத்திரன

மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணத்தை கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்து இன்று (ஜன30) திங்கட்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தார்.

மட்டக்களப்பை இன்று (30) வந்தடைந்த சுகத் பத்திரன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் வரைவடத்தின்படி கரையோரமாக இலங்கையை சுற்றிவருவதுடன் அந்த நடபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகளை கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துகள் அடங்கி பொதியை வழங்கவுள்ளேன்.

இதற்கு முன்மாதிரியாக தனியாக இந்த சுற்று பயணநடையை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி ஆரம்பித்து அலாவத்தை புத்தளம் கல்பிட்டி நொச்சியாகம ஊடாக தலைமன்னார் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை சென்று அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு திருகோணமலை ஊடாக  மட்டக்களப்பிற்கு இன்று திங்கட்கிழமை 1,200 கிலோமீற்றர் தூரம் நடையாக வந்தடைந்துள்ளேன்.

இங்கிருந்து அக்கரைப்பற்று பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை கதிர்காமம் சென்று அங்கிருந்து மாத்தறை ஊடாக 2 ஆயிரத்து 200 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இலங்கையை சுற்றிவரும் நடைபயணம் கொழும்பு காலிமுகத்திடலை சென்றடையவுள்ளது.

கல்வி உபகரணங்கள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டதுடன் நடைபணம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை தனக்கு மக்கள் ஆதரவு வழங்கிவருவதாகவும் இதில் இணையவிரும்பியோர் தன்னோடு இணைந்து பயணிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Previous Post

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

ஆறு ரூபாய் அதிகம் விற்றதால் லட்ச ரூபாய் அபராதம் செலுத்திய முட்டை வியாபாரிகள்

Next Post
யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஆறு ரூபாய் அதிகம் விற்றதால் லட்ச ரூபாய் அபராதம் செலுத்திய முட்டை வியாபாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures