Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்!

February 25, 2018
in News, Politics, World
0

‘புதுச்சேரில் உள்ள ஆட்சி நல்ல முறையில் செயல்படுகிறதா? நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்தியாவை 48 ஆண்டுகள் ஒரு குடும்பம் ஆட்சி செய்திருக்கிறது. 48 ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள் என்று அறிவு ஜீவிகள் யோசித்து பார்க்க வேண்டும். அதேபோல பத்து ஆண்டுகளாக அந்த குடும்பத்தின் ரிமோட் மூலம் ஆட்சி நடைபெற்றது.’ என்று மோடி பேசிவருகிறார்.

’புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன’ என்று மோடி காட்டமாக தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி ‘புதுச்சேரி மக்கள் விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக கருதுபவர்கள். புதுச்சேரிக்கு வந்த பிறகுதான் பாரதியார் தேசியக் கவியாக மாறினார். மகாகவி பாரதியாரை அன்போடு ஏற்று கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள். ஆங்கியேலரிடம் இருந்து தப்பி வந்த அரவிந்த் கோஷுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் புதுச்சேரி மக்கள்’ என்று புகழாரம் சூட்டினார்.

ஆரோவில் பொன்விழாவை தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரோவில் சென்றடைந்தார் பிரதமர் மோடி. ஆரோவில் 50 வது உதயதினத்தையொட்டி ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை மற்றும் மாத்ரி மந்திர் அடங்கிய அஞ்சல் தலையை மோடி வெளியிட்டார்.

Previous Post

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு

Next Post

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!

Next Post
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures