சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் இலங்கைக்கான புதிய நிதித் திட்டத்தை ஆராயும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரி ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையுடனான புதிய நிதித் திட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

