Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும்

July 7, 2018
in News, Politics, World
0

உரிய நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் புதிய தேர்தல் முறையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பழைய முறையின் ஊடாகவே சகல தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பில் சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

விருப்பு வாக்குமுறையைவிட கூடுதலான மோசடிகள் இடம்பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் புதிய முறையில் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, பழைய முறையில் தேர்தலை நடத்துவதே சகலருக்கும் நீதியை நிலைநாட்டுவதாக அமையும். அது புதிய தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளைத் திருத்தி டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த முடியாது. மாகாணசபைத் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதாயின் பழையமுறையின் கீழேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

புதிய முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் 43 உறுப்பினர்கள் இருந்தனர். எனினும், உத்தேச எல்லை நிர்ணயத்தின் கீழ் வட்டாரங்களிலிருந்து 13 பேர் மாத்திரமே முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவுசெய்யப்படுவார்கள். 50 வீத விகிதாசாரத்தின் அடிப்படையில் மேலும் 26 பேர் தெரிவுசெய்யப்படலாம். இப்படித் தெரிவுசெய்யப்படும்போது முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும். இது முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கும் அநீதியாகும் என்றார்.

சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் பலமுறைகளில் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் சாதகமானதொரு முடிவை – முறையை தெரிவுசெய்யமுடியாதுள்ளது. இற்றைக்கும் அது பரீசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. அதாவது, இலங்கையானது தேர்தல் முறைமையை பரீசிலிக்கும் ஆய்வுகூடமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையால் எதிர்மறையான விடயங்கள் நீங்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.

மாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையிலும் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு புதிய குழுவொன்றை அமைத்து, மீண்டுமொரு அறிக்கையை பெற்று புதிய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டில் இருந்தால் உரிய காலத்தில் தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலையேற்படும்.

ஆகவே பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும், மீண்டும் நேரத்தை வீணடிக்காது புதிய தேர்தலை முறைமையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விருப்புவாக்கு முறைமைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையின்கீழ் நடைபெற்ற உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள் இடம்பெற்றன. அவற்றை எம்மால் தடுக்கமுடியாமல்போனது. தொகுதிகளை கைப்பற்றுவதற்காக பணம் அள்ளிவீசப்பட்டது. விருப்பு வாக்குமுறையைவிட மோசடி நிறைந்த சூழலை இது உருவாக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது என்றார்.

Previous Post

கொழும்பில் 9 மணித்தியால நீர்வெட்டு

Next Post

மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல்

Next Post

மாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures