Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா பரிந்துரை

October 12, 2018
in News, Politics, World
0

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளார்.

இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள அரசியலமைப்பு சபை இவரது நியமனத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதியரசர் பிரியசாத் டெப்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், சிறிலங்காவின் 46 ஆவது தலைமை நீதியரசர் இன்று நியமிக்கப்பட வேண்டும்.

இதனை அங்கீகரிப்பதற்கான அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் இழுபறிகள் காணப்பட்டன.

அரசியலமைப்பு சபைக்கான, உறுப்பினர்களாக, அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, தலதா அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ச, பிமல் ரத்நாயக்க, ஜெயந்த தனபால, ஜாவிட் யூசுப், என்.செல்வக்குமரன் ஆகியோர் மூன்றாண்டு பதவிக்காலத்துக்காக நேற்று நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்த நெருக்கடி தீர்ந்துள்ளது.

இந்தநிலையில், உச்சநீதிமன்ற நீதியரசரான, நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பு சபைக்கு நேற்று முன்மொழிந்துள்ளார்.

இவர், 10 பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்களில், மூப்பு வரிசையில், ஆறாம் இடத்தில் இருக்கிறார்.

2016ஆம் ஆண்டு இவரை உச்சநீதிமன்ற நீதியரசராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே நியமித்திருந்தார்.

மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர், தலைமை நீதியரசராக, பொறுப்பேற்கும் முதலாவது தொழில்சார் நீதியரசராக இவரே இருப்பார்.

நீதிவானாக பணியை ஆரம்பித்து, தலைமை நீதியரசராக உயர்பதவிக்கு கடைசியாக நியமிக்கப்பட்டவர், நீதியரசர் பரிந்த ரணசிங்க ஆவார்.

அதற்குப் பின்னர், நளின் பெரேராவே, நீதிவானாக பணியை ஆரம்பித்து, தலைமை நீதியரசராக பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள, சிறிலங்கா பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய 7 புதிய உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபை புதிய தலைமை நீதியரசரின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிக்கும்.

Previous Post

நீதி அமைச்சரின் கருத்து தவறானது!!

Next Post

முதலமைச்சரைக் கைவிட்ட சட்டமா அதிபர்

Next Post

முதலமைச்சரைக் கைவிட்ட சட்டமா அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures