Thursday, July 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்

January 10, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய  அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள்  ஜன­வரி மாதத்தில்  ஆரம்­ப­மாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு  அமைச்சர் சட்­டத்­த­ரணி  ஹர்ஷன நாண­யக்­கார   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சமூக கட்­ட­மைப்பில்  காணப்­படும்   அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு  புதிய  அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் ஊடாக  தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும்.  அனைத்து இன மக்­களும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான  புதிய அர­சி­ய­ல­மைப்பு   உரு­வாக்­கப்­படும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வா­னது  புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக  முன்­வைக்­கப்­படும்  என்று  தேசிய மக்கள் சக்தி  அர­சாங்கம்  உறுதி வழங்­கி­யுள்­ளது.  கடந்த  ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது  வெளி­யி­டப்­பட்ட   தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இந்த விடயம்   தெட்­டத்­தெ­ளி­வாக  குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு  புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம்  தீர்வு காணப்­படும்.   அது­வ­ரையில்  நடை­மு­றை­யி­லுள்ள   மாகா­ண­சபை முறைமை  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று  தேசிய மக்கள் சக்­தியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உறுதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதே­போன்றே  பாரா­ளு­மன்ற  தேர்­த­லின்­போதும்   இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்­தி­யினால் உறுதி மொழிகள் வழங்­கப்­பட்­டன.  தேசிய மக்கள் சக்­தியில்    பிர­தான  அங்­க­மாக திகழும் ஜே.வி.பி.யானது   மாகா­ண­சபை முறை­மை­யையும்  13ஆவது திருத்தச் சட்­டத்­தையும் கடு­மை­யாக   எதிர்த்து வந்­தது.   இணைந்­தி­ருந்த  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்து   பிரிப்­ப­தற்கு ஜே.வி.பி.யே வழி வகுத்­தி­ருந்­தது.

1987ஆம் ஆண்டு இந்­திய– இலங்கை ஒப்­பந்தம்  செய்­யப்­பட்டு  13ஆவது திருத்தச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்ட போது அதற்கு  எதி­ராக போர்க்­கொடி தூக்­கிய இயக்­க­மாக  ஜே.வி.பி.  விளங்­கி­யது.  தற்­போது   தேசிய மக்கள் சக்­தி­யாக   உரு­வெ­டுத்­துள்ள  ஜே.வி.பி.  தமது கொள்­கையில்  சில மாறு­தல்­களை   செய்­தி­ருக்­கின்­றது.  இத­ன­டிப்­ப­டை­யில்தான்  புதிய அர­சி­ய­ல­மைப்பினூடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு  உரிய தீர்வு காணப்­படும் வரை மாகா­ண­சபை முறை­மையை   தொடர்­வ­தற்கு   அந்­தக்­கட்சி இணங்­கி­யி­ருக்­கின்­றது.

ஆனாலும்  இன்­னமும் பகி­ரங்­க­மாக  13ஆவது திருத்­தத்தை ஆத­ரிக்­கவோ அல்­லது மாகா­ண­சபை முறை­மையை   வலுப்­ப­டுத்­து­வது குறித்து பேசு­வ­தற்கோ   தேசிய மக்கள் சக்தி  தயா­ராக இல்லை.  இந்­தி­யா­வுக்கு அண்­மையில் விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க  இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் இரு­த­ரப்பு சந்­திப்பில் ஈடு­பட்­டி­ருந்தார். இதன்­போது   13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வெளிப்­ப­டை­யாக பேசப்­ப­ட­வில்லை.

பேச்­சு­வார்த்­தையை அடுத்து வெளி­யி­டப்­பட்ட  கூட்­ட­றிக்­கையில் கூட  இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பிலோ,  13ஆவது  திருத்தச் சட்டம் குறித்தோ   குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்த விட­யங்­களை கூட்­ட­றிக்­கையில் இடம்­பெறச் செய்­வ­தற்கு  தேசிய மக்கள்  சக்தி அர­சாங்கம்   விரும்­ப­வில்­லையாம். இந்த விடயம் தொடர்பில் இந்­தி­யா­வுக்கு   தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே 13ஆவது திருத்தம் தொடர்பில் கூட்­ட­றிக்­கையில்   எது­வுமே தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்ற விட­யமும் தற்­போது பகி­ரங்­க­மா­கி­யுள்­ளது.

தேசிய மக்கள் சக்­தியின் எதிர்ப்பு கார­ண­மா­கவே இந்­தியப் பிர­தமர்  நரேந்­திர மோடியும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வு­டான சந்­திப்பை அடுத்து இடம்­பெற்ற   கூட்டு செய்­தி­யாளர் மாநாட்டில்  13ஆவது திருத்தச் சட்­டத்தின் அமு­லாக்கம் தொடர்பில் நேர­டி­யாக எத­னையும் குறிப்­பி­ட­வில்லை. 

மாறாக தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை   பூர்த்தி செய்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்று தான் நம்­பு­வ­தா­கவும்  அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தி  மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்­களை   நடத்த வேண்டும் என்றும்  இந்­தியப் பிர­தமர்  மோடி இதன்­போது   வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இவ்­வாறு  13ஆவது திருத்தம், மாகா­ண­சபை முறைமை என்­ப­வற்­றுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை கொண்­டி­ருக்கும்  தேசிய மக்கள் சக்­தி­யா­னது  இனப்­பி­ரச்­சி­னைக்­கான  தீர்வு விட­யத்தில் எத்­த­கைய கொள்­கை­யினை கடைப்­பி­டிக்கும்   என்ற விட­யத்தில் சந்­தே­க­மான நிலைமையே   உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

 இனப்­பி­ரச்­சி­னைக்கு   அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தீர்வு காணப்­படும் என்று  தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தாலும் அந்தத் தீர்வு எத்­த­கை­ய­தாக அமையும்?  தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை அந்தத் தீர்வு  நிறை­வேற்­றுமா? மாகா­ண­சபை  முறை­மையை விட  கூடிய அதி­கா­ரங்­களைக்  கொண்­ட­தாக  தீர்வு அமை­யுமா? என பல்­வேறு கேள்­விகள்  தற்­போது  எழு­கின்­றன.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் 13ஆவது திருத்தச் சட்டம் என்­பது  இனப்­பி­ரச்­சி­னைக்­கான  தீர்வு விட­யத்தில்  அடிப்­ப­டை­யாக   கொள்­ளப்­ப­டுமே தவிர,  அதுவே  இறு­தித்­தீர்வு அல்ல என்­பதை தேசிய மக்கள் சக்தி  புரிந்து கொள்­ள­வேண்டும். 13ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுக்காக முன்­னோக்கி  செல்ல வேண்டும்.

நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட  புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான  முயற்­சி­களை   தொடர்ந்தும் முன்­னெ­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்­பதே   தேசிய மக்கள் சக்­தியின்  வாக்­கு­று­தி­யாக உள்­ளது.  நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு அன்­றைய  பிர­தமர் ரணில்  விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் வழி­ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்டு  புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இந்த வழி­ந­டத்தல் குழுவில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்­சி­க­ளது  பிர­தி­நி­திகள் இடம்­பெற்­றி­ருந்­தனர். இந்­தக்­கு­ழுவில் இன்­றைய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவும்  அங்­கத்­துவம் வகித்­தி­ருந்தார்.    இதன்­போது  தேர்தல் முறைமை மாற்றம்  மற்றும்  அர­சியல் தீர்வு என்­பன தொடர்பில்  ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு  தொடர்பில் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டுகள்   இந்த கால­கட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டன.   ஒரு­மித்த நாட்­டுக்குள்  மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை மத்­திய அரசு மீளப்­பெற முடி­யாத வகை­யி­லான யோச­னைகள்   முன்­வைக்­கப்­பட்­டன.  இனப்­பி­ரச்­சி­னைக்­கான இத்­த­கைய  அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய  இடைக்­கால அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந்த அர­சியல் தீர்­வுக்­கான கலந்­து­ரை­யா­டலில் ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை விடுத்து ஒரு­மித்த நாடு என்ற பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.  இந்­தக்­கா­லப்­ப­கு­தியில் வழி­ந­டத்தல் குழு­வா­னது  அர­சியல் தீர்வு தொடர்பில்  கலந்­து­ரை­யா­டி­ய­போது  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்   தலை­வ­ரா­கவும் அன்­றைய எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் பதவி வகித்த மறைந்த  இரா. சம்­பந்தன்   பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­களை  மேற்­கொண்டு பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டி­ருந்தார்.

இவ்­வாறு  பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்களை மேற்­கொண்டு எப்­ப­டி­யா­வது அர­சியல் தீர்வைக் கண்­டு­விட வேண்டும் என்று  அவர் அக்­கறை கொண்­டி­ருந்தார். 2016 ஆம் ஆண்டு தைப்­பொங்­க­லுக்கு முன்னர் அர­சியல் தீர்வைக் கண்­டு­வி­டலாம் என்று அவர் நம்­பிக்­கையும்  வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனாலும் இந்த முயற்­சி­யா­னது  அன்­றைய அர­சியல் சூழ்­நிலை கார­ண­மாக சாத்­தி­ய­மற்­றுப்­போ­னது.  நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் அர­சியல் தீர்வு தொடர்பில்  உட­ன­டி­யாக  பேசப்­ப­ட­வில்லை. 

100நாள் திட்டம் வகுத்து பல்­வேறு செயற்­பா­டு­களை  நல்­லாட்சி அர­சாங்­கமும் மேற்­கொண்­டி­ருந்­தது.  சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டன. தகவல் அறியும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது,

இவ்­வாறு பல்­வேறு செயற்­றிட்­டங்கள் 100 நாட்­க­ளுக்குள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனாலும்  புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்சி காலம்   தாழ்த்­தியே  ஆரம்­பிக்­கப்­பட்­டது.  இத­னால்தான் அதனை  முழு­மை­யாக  முன்­னெ­டுக்க  முடிந்­தி­ருக்­க­வில்லை.

தற்­போதும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது  பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவைப் பெற்று ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கின்­றது. மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இல­கு­வாக கிடைத்­தி­ருக்­கின்­றது.இந்த மக்கள்  ஆத­ர­வுடன்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வை  உள்ளடக்கிய  புதிய  அரசியலமைப்புக்கான முயற்சியானது  உடனடியாகவே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அண்மையில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சரவையின் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ,  புதிய  அரசியலமைப்பு தொடர்பிலான யோசனை  மூன்று வருடங்களில் மக்களிடம்  சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.  இவரது கருத்தை அடுத்து  அரசாங்கமானது உடனடியாக  புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை எடுக்கப் போவதில்லை என்ற கருத்து  நிலவியது.

ஆனாலும் நீதி அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார  புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் ஜனவரியில் ஆரம்பமாகும் என்று அறிவித்துள்ளமை   வரவேற்கத்தக்க செயற்பாடாகும்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவது வழமையாகும்.  சகல மக்களையும்  திருப்திப்படுத்தும் வகையில் இந்த அரசியலமைப்பு  அமைய வேண்டியது  அவசியமாகவுள்ளது.  அதற்கேற்றவகையில்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது  புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையில்  உடனடியாகவே  இறங்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Previous Post

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Next Post

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

July 17, 2025
கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

July 17, 2025
வயலில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை!

வயலில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை!

July 17, 2025
முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

July 17, 2025

Recent News

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றம்

July 17, 2025
கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

கொழும்பில் செம்மணிக்கு நீதிகோரி போராட்டம் | பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை

July 17, 2025
வயலில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை!

வயலில் விட்டுச் செல்லப்பட்ட பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை!

July 17, 2025
முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு சின்னாற்றில் இருந்து சடலம் மீட்பு

July 17, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures