புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முன்வைக்க முடியுமாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அறிவித்துள்ளார்.
அதற்கிடையில் இடைக்கால கணக்கு அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், இதற்கும் ஏரிரு நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாளை (18) நடைபெறவுள்ள சபை அமர்வின் போது வரவு செலவுத் திட்டமோ, இடைக்கால கணக்கு அறிக்கையோ முன்வைக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரச துறையிலுள்ளவர்களுக்கான ஜனவரி மாத சம்பளம் உட்பட அரச செலவினங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசரமாக இடைக்காலக் கணக்கு அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

