Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டவர்

December 17, 2021
in News, Sri Lanka News
0
ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி

நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையாவார். குறித்த வெளிநாட்டு பிரஜை இலங்கையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறுனார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கு விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்ட சில மாதிரிகள் , கொவிட் பிறழ்வை இனங்காண்பதற்கான ஆய்வுகூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவ்வாறு அனுப்பட்ட மாதரிகளிலேயே புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையொருவர் ஆவார். இவர் நாட்டுக்கு வருகை தந்து பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்றும் , இலங்கையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது.

குறித்த நபர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளானவராவார். தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அவர் செய்து கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது.

இதனால் குறித்த நபர் நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனையை செய்து கொள்ளவில்லை.

எனினும் அவரிடம் குறித்த பி.சி.ஆர். இன்மையால் இலங்கைக்குள் வந்தவுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பெற்றுக் கொண்ட மாதிரியிலேயே அவருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குறித்த நபர் வேறு ஏதேனும் இடங்களுக்குச் சென்றுள்ளாரா என்பது தொடர்பான தகவல்கள் அவர் தங்கியிருந்த சுகாதார மருத்துல அதிகாரி பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | easy24newskiruba@gm

Previous Post

சந்தையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு – நுகர்வோர் விசனம்

Next Post

வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம்

Next Post
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம்

வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures