Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்

April 25, 2018
in News, Politics, World
0

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் புதர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் அருகில் இருந்து பாதுகாத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன

குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சோ்ந்த 3 வயது குழந்தையான அரோரா விளையாட்டுத்தனமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

சரியாக காது கேட்காத மற்றும் கண் குறைபாடு கொண்ட மேக்ஸ் என்னும் அவா்களது குடும்ப நாய் அரோராவை பின் தொடா்ந்து சென்றுள்ளது.

அந்த குழந்தை வீடு திரும்பாததையடுத்து அக்குழந்தையின் உறவினா்கள் குழந்தையை தேடத்தொடங்கினா்.

தங்களின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டா் தூரத்தில் உள்ள இடத்தில் இருந்து அரோரா கத்தியதைக் கேட்டதாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.

நான் மலையை நோக்கி கத்திக்கொண்டே சென்றேன். நான் மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த நாய், அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச்சென்றது

என்று அவர் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் கண்டுபிடிக்கும் வரை சுமார் 16 மணி நேரம் குழந்தையுடன் நாய் தங்கியுள்ளது.

அன்று இரவு வெப்பநிலை 15 டிகிரி நிலவிய நிலையில், குழந்தை நாயுடன் சோ்ந்து பாறையொன்றின் அடியில் தங்கியிருந்தது என்று அரோராவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனா்.

குழந்தையைத் தேடுவதற்கான பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்.

நாய் மேக்ஸின் செயலைப் பாராட்டிய பொலிஸார், அதற்கு கௌரவ பொலிஸ் என்று பெயரிட்டனா்.

இரவு முழுவதும் குழந்தையைப் பாதுகாத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

Previous Post

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும்

Next Post

இராணுவத்தின் வசமிருந்த 80 வீதமான காணிகள் விடுவிப்பு

Next Post
700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

இராணுவத்தின் வசமிருந்த 80 வீதமான காணிகள் விடுவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures