Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புகை மண்டலமாக மாறிய வவுனியா!

January 21, 2018
in News
0

மன்னார் பொது மயானத்திற்கு அருகில் குவிக்கப்பட்டுள்ள குப்பையில் தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேசமெங்கும் புகை மண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவதோடு, மன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர்ப்புறத்தில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள், மயானத்திற்கு அருகில் நகர சபையினால் கொட்டப்படுகின்றன.

இந்த நிலையில் கழிவுப் பொருட்கள் சேர்ந்துள்ள குப்பை மேடு நேற்று மாலை தீப்பற்றி எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளதோடு, வீதிகளில் நீண்ட நேரமாக வாகன நெரிசல் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் சிலர் குப்பைகளில் காணப்பட்ட இரும்பு பொருட்களை எடுப்பதற்காக குப்பை மேட்டில் தீ வைத்ததாலேயே தீப்பரவியதாக மன்னார் நகர சபை செயலாளர் தெரிவிக்கின்றார்.

Previous Post

சிங்கப்பூரில் நடத்துனர் இன்றி இயங்கும் பேருந்து!

Next Post

இலங்கை பொலிஸாரினால் நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி!

Next Post

இலங்கை பொலிஸாரினால் நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures