Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிள்ளை வரம் கேட்டு சென்ற என் தங்கை எங்கே

April 28, 2018
in News, Politics, World
0

இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண் சுவிஸ் வந்துள்ள நிலையில், அவர் வாழ்க்கையில் எவ்வாறு போராடி வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட புனிதா,

“இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக நான் இன்று சுவிட்சர்லாந்தில் வாழ்கிறேன். எனது சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிலும் கனடாவிலும் வாழ்கின்றார்கள்.

என் இரட்டை சகோதரி புஷ்பா 2002 ல் காணாமல் போனார். அவர் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு நாள் மாலை, அவர் கோவிலுக்கு செல்ல விரும்பினார், ஆனால் நான் அவரிடம் போகக் கூடாது, அது மிகவும் ஆபத்தானது என கூறினேன்.

எனினும் அவர் குழந்தை இல்லாத விடயம் குறித்ததான வேண்டுதலுக்காகவே அவர் கோவிலுக்கு சென்றார். அவ்வாறு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.

அவருக்கும் அவரது கணவருக்கும் என்ன நடந்ததென இன்னமும் எனக்கு தெரியாது. இதன் காரணமாக அச்சம் அடைந்த எனது பெற்றோர் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர் ஒருவரை இலங்கையில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். 2012ம் ஆண்டு நானும் மகனும் கணவரின் நாடான சுவிஸ் சென்றேன்.

இலங்கையில் ஆபத்தான நிலையில் வாழ்ந்த எனக்கு சுவிட்சர்லாந்தில் வாழக் கிடைத்தமை ஒரு அதிஷ்டமாகவே கருதுகிறேன்.எனினும் எங்கள் ஊனமுற்ற மகனின் பாதுகாப்பு காரணமாக நாங்கள் ஒரே குடும்பமாக ஒன்றாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு Langnau பாடசாலையில் மகனுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அங்கு அவர் நன்கு ஆதரிக்கப்பட்டு வருகிறார்.

எனது மகன் Langnau பாடசாலைக்கு சென்ற பின்னரே பேசத் தொடங்கினார். அவர் முன்னர் எதுவும் கூறியதில்லை. அவர் தமிழ் மொழியில் கூட ஒரு வார்த்தை கூறியதில்லை.

மூன்றரை வயதுடைய எங்கள் இரண்டாவது மகன் பாலர் பாடசாலைக்கு செல்கிறார். இவ்வாறான நிலையில் ஒரு ஜேர்மன் மொழி பாடநெறியில் இணைய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இதனால் நான் கடந்த ஆண்டு ஒரு விற்பனையாளராகினேன். Langnauவில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே உள்ள இடங்களிலுள்ள மக்கள் மிகவும் நட்புடனே உள்ளனர்.

சில நேரங்களில் நாம் அவர்களுடன் சிறிய உரையாடலை அல்லது ஒரு நீண்ட உரையாடலில் கூட ஈடுபடுவேன். என்னை பார்ப்பவர்கள் என்னிடம் ஹாய் புனிதா! என்பார்கள்.

ரயில்களில் நான் பத்திரிகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். இதனால் நிறைய பேருக்கு என்னை தெரியும்.

சுவிட்சர்லாந்தில் என் வாழ்க்கையை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். ஆனால் எனது பெற்றோர் குறித்த வருத்தம் எனக்கு உள்ளது.

என் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, வீட்டுப் பொருளாதாரம் குறித்து Swiss Workers’ Relief Agency Bern என்ற நிறுவனத்தில் ஆறு மாத கால படிப்பில் இணைந்துள்ளேன்.

இலங்கையில், உள்நாட்டு சேவையில் முதன்மையாளராக பணியாற்றினேன். 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஆசிரியராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது, நான்காம் மற்றும் ஐந்தாவது வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் இலக்கணத்தை நான் கற்பித்தேன். எனினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அது முடிவடைந்தது.

உள்நாட்டு போர் காரணமாக நான் அங்கிருந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த Swiss Workers’ Relief Agency Bern படிப்பில், என் அறிவை விரிவுபடுத்தவும் ஜேர்மன் மொழியை மேம்படுத்தவும் முடியும்.

முதல் இரண்டு மாதங்களில், ஒவ்வொரு காலையிலும் பாடசாலைக்கு சென்று, ஜேர்மனில் பேசுவதும், கேட்பதும் உட்பட, இந்தத் துறையின் மிக முக்கியமான சொற்களையே கற்றுக்கொள்வேன். அதன்பின், ஒரு Spitex அமைப்பு அல்லது ஒரு வீட்டில் நான்கு மாத வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தற்போது என் நாட்கள் மிகவும் பரபரப்பாக உள்ளன. என் மகனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் நான் பத்திரிகைகளை விற்கிறேன், பிறகு பணி செய்யும் வீட்டுக்குப் போகிறேன்.

மகனுக்கு பாடசாலை முடிந்தவுடன் எனது கணவர் மகனை பார்த்து கொள்வார். இதனால் ஏனைய சில வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என புனிதா தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல்

Next Post

மட்டக்களப்பில் மதுவிற்பனை நிலையங்கள் முற்றுகை

Next Post

மட்டக்களப்பில் மதுவிற்பனை நிலையங்கள் முற்றுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures