சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி எனப்படும் கே. புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டதாக பிள்ளையான் மற்றும் இனியபாரதி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
ஏராளமான கொலைகள்
அதன்படி, இவர்கள் இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பிலும் கொழும்பின் கெசல்வத்தையிலும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், 2007-2008 காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஏராளமான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களைச் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.