Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரமற்ற பென்சில்கள் சந்தைக்கு வருகை 

January 29, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

புதிய பாடசாலை தவணைக்கான புத்தகப் பட்டியல்களைத் தயாரிக்கும் போது  தரமான பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுவர்களின் பாவனைக்கு பொருத்தமற்ற பென்சில்கள் சந்தையில் காணப்படுவதாகவும் இவ்வாறான பென்சில்களை பயன்படுத்துவது பிள்ளைகளின் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் அந்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் பொது செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தரமற்ற பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களை பாவிப்பதன் மூலம் பிள்ளைகளின் சுகாதாரத்துக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படுவதுடன் கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுவது தொடர்பில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன் போது அவர் கூறியுள்ளதாவது, 

பென்சில்களின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் வண்ணப்பூச்சிகளுக்கு சர்வதேச தரநிலைகள் உள்ளன. உதாரணத்திற்கு ஐரோப்பிய சங்கம் பரிந்துரைத்துள்ள சீஎன் அல்லது ஈஎன்71 போன்ற தரத்துடனான பென்சில்களின் பயன்பாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏனெனில் குழந்தைகள் பென்சில்களை பயன்படுத்தும் போது, அவர்கள் அதனை வாயில் வைப்பதுடன், மூக்கு மற்றும் வாயை சுற்றியுள்ள பகுதிகளை தொடலாம். அதில் கனரக உலோகங்கள் இருந்தால், அவை குழந்தைகளின் உடலுக்குள் நுழையும்.

பென்சில் தயாரிக்கப் பயன்படும் காபன் பொருள் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும். பென்சில்களின் நுனிகள் அடிக்கடி உடைந்து, சரியாக எழுதாத நிலையில் இது குழந்தைகளின் கற்றலையும் பாதிக்கிறது. இந்த நாட்களில் புத்தகப் பட்டியல் தயாரிக்கும் ஆசிரியர்கள் இவ் விடயம் குறித்து பெற்றோர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தரமான பாடசாலை உபகரணங்களை தமது பிள்ளைகளுக்கு வழங்குவதில் பெற்றோர்கள் விசேட கவனம் வெலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மாவை வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

Next Post
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures