Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்

February 17, 2019
in News, Politics, World
0

பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து நீதிமன்றம் விரிவாக எடுத்துரைத்துள்ளது.

அதாவது இலங்கையிலிருந்து வந்து அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளின் கோரிக்கையை பரிசீலிக்கும் போது அவர்கள் இலங்கையில் தாம் எதிர்நோக்கும் உயிராபத்து மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக எவ்வாறான கோரிக்கையை முன்வைத்தாலும், அவர்கள் எவற்றிற்கெதிராக முறையிடுகின்றார்களோ அவர்களால் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள் என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது.

அத்துடன், அவர்களால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.

அதாவது அவ்வாறான சான்றுகளை நிராகரிப்பதாயின் அதற்கான போதிய காரணங்களை எடுத்துக்கூற வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அம்முடிவு சட்டத்தின் முன் செல்லுபடியாகாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் உள்நாட்டு திணைக்களத்தினால் போதிய காரணம் தரப்படாமல் நிராகரிக்கப்படும் அகதி விண்ணப்பங்களை நீதிமன்றில் மேன்முறையீடு செய்து பரிகாரம் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை தோன்றியுள்ளது.

நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பானது இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

தெற்காசிய பிராந்திய தூய்மைப்படுத்தல் மாநாடு கொழும்பில்

Next Post

ரஞ்ஜனைப் பிடித்து விசாரியுங்கள், அல்லது கைது செய்யுங்கள்

Next Post

ரஞ்ஜனைப் பிடித்து விசாரியுங்கள், அல்லது கைது செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures