பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீமூட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அலரிமாளிகையில் இருந்த தீயணைப்பு கருவியை திருடிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துளார்.
இவர்கள் கல்கிஸ்ஸ, ஜாஎல, காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகின்றன.