Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் | சுப்ரமணியன் ஸ்வாமி

May 12, 2022
in News, Sri Lanka News
0
பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் | சுப்ரமணியன் ஸ்வாமி

பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவொன்றைச் செய்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, ‘அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் அவர் செய்திருக்கும் மற்றொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர். எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் | பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்

Next Post

அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்

Next Post
அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்

அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures