Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகள் வேண்டும்

June 11, 2018
in News, Politics, World
0

பிணைமுறி மோசடி தொடர்பில் விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமான முறையில் ஒருவர் பணம் பெற்றுக்கொள்வதாயின் அவருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒருவர் இன்னொருவரிடம் பணம் பெற்றுக்கொள்வது ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படாவிட்டாலும் பணம் பெற்றுக்கொள்வதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் இலாபத்திற்காக பணம் பெறப்பட்டிருக்குமாயின் அது பாரிய குற்றம் என சுட்டிக்காட்டிய முதலமைச்சர் அவ்வாறான அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும் இல்லாவிட்டால் ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அவை பொது மக்களுக்கு தெரியும் விதத்தில் வெளிப்படையாக காணப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வரியை நீக்காது போனால் 18 முதல் விசேட மருத்துவ நிபுணர் சேவை இல்லை

Next Post

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா

Next Post

இலங்கைக்கான 585 மில்லியனை இடைநிறுத்தியது சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures