Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்ம மரணம்; கொரோனா என சந்தேகம்

June 2, 2020
in News, Politics, World
0

பாடசாலை ஒன்றில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- வடமராட்சி புலோலி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை காவலாளியே இவ்வாறு சடலமாக காணப்பட்டுள்ளார். குறித்த காவலாளி நேற்று இரவு பாடசாலையின் காவல் கடமையை பொறுப்பேற்று காவல் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பகல் கடமையினை பொறுப்பேற்பதற்காக காலை 6.00 மணிக்கு சென்ற காவலாளியாலே அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கதிரையில் இருந்தவாறு நித்திரையில் இருந்த அவரை பகல் கடமைக்கு சென்றவர் தட்டி எழுப்பியபோதே அவர் உயிரற்ற சடலமாக காணப்படுவதை அறிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளாரா என பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Previous Post

மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

Next Post

5ஆம் திகதி முதல் அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு

Next Post

5ஆம் திகதி முதல் அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures