Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது – இன்று மீண்டும் நீதிமன்றில்!

December 19, 2019
in News, Politics, World
0

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் வீதி விபத்தில் நபர் ஒருவருக்கு பாரிய காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் அதன் பின்னர் வாகன சாரதியை மாற்றி தப்பிச் சென்றமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது இலலத்தில் வைத்து இந்தக் கைது இடம்பெற்றது.

இதையடுத்து, கொழும்பு – புதுக்கடை 4ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா, கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்ததற்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிரான தீர்மானம்

Next Post

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை!

Next Post

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures