நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மேலும் மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் புதன்கிழமை (20) வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி இவ்வாண்டிற்கான இரண்டாம் தவணை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
