Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படை

February 27, 2019
in News, Politics, World
0

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்தியா விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இதன் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் என்ன ஆனார் என்பதுதான் தற்போது மிக முக்கியமான கேள்வியாக உருவெடுத்துள்ளது.

இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் காணாமல் போனார். அவர் இப்போது பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தரப்பு அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் அபிநந்தன் காணாமல் போனதையும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்தால், ஐநாவில் கூறி இதுகுறித்து முறையிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் சர்வீஸ் எண் 27981. இவரின் விங் கமாண்டர் விமானி. இவர் 173 கோர்ஸ் பிரிவை சேர்ந்தவர்.

இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன், என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானபடைக்கு முதற்கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். அதன்பின் வடமாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார். அபிநந்தன் குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

Previous Post

சமந்தா பவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துள்ளமை முப்படையினரை அவமானப்படுத்தும் செயல்

Next Post

ஈசி 24 நியூஸ் ஐரோப்பா பாய்ச்சல் -கொள்ளையடிப்புக்களை வெளிக்கொண்டு வந்தோம் !!

Next Post

ஈசி 24 நியூஸ் ஐரோப்பா பாய்ச்சல் -கொள்ளையடிப்புக்களை வெளிக்கொண்டு வந்தோம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures