Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா

March 5, 2019
in News, Politics, World
0

பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியப் போர் விமானம் இன்று (திங்கட்கிழமை) சுட்டு வீழ்த்தியது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானர் எல்லைப் பகுதியில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

குறித்த எல்லைப் பகுதியில் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் பாகிஸ்தான் நாட்டு உளவு விமானத்தை இந்தியாவின் சுகோய்-30MKI ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.

பாகிஸ்தான் உளவு விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை விமானப் படையின் ராடர்கள் மூலம் கண்டறியப்பட்டன. இதையடுத்து, இந்திய போர் விமானம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்களை அழித்தன. இதன்பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் எல்லை மீறிய வான் தாக்குதல் இடம்பெற்றது.

இதனிடையே பாகிஸ்தானால் இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையாகி இந்தியாவுக்கு திரும்பியயுள்ள நிலையில் மீண்டும் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இவ்­வ­ரு­டத்­துக்­கான வரவு செலவு திட்டம் இன்று சமர்ப்பிப்பு

Next Post

போர் குற்றங்களை விசாரிப்பது பாரதுரமான செயல்

Next Post

போர் குற்றங்களை விசாரிப்பது பாரதுரமான செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures