Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது ஐ.நா., சபையில் வெளியேறிய சுஷ்மா

September 29, 2018
in News, Politics, World
0
பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது ஐ.நா., சபையில் வெளியேறிய சுஷ்மா

‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா முகம்மது குரோஷி பேசிக் கொண்டிருக்கும்போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் வெளியேறியதால், பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையில், ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின், ௭௩வது மாநாடு நடக்கிறது.இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உட்பட ௧௯௩ உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது

:பொருளாதார வளர்ச்சிக்கு, பிராந்திய ஒத்துழைப்பும், சமூக அமைதியும், பாதுகாப்பும் முக்கியம். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் ஆதரவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை, அமைச்சர் ஷா முகமது குரோஷி பேசத் துவங்கினார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, சுஷ்மா சுவராஜ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.தொடர்ந்து, ஷா முகமது குரோஷி பேசியதாவது:பிராந்திய ஒத்துழைப்பு குறித்து, சுஷ்மா பேசினார்.

அதைப்பற்றி பேச, உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆனால், சுஷ்மா பாதியிலேயே வெளியேறினால், பிராந்திய ஒத்துழைப்பு குறித்து எப்படி முடிவு எடுப்பது.

ஒரு நாட்டின் அணுகுமுறையால், ‘சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.சுஷ்மாவுக்கு முன்பே, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.

சுஷ்மாவுக்கு வேறு சில முக்கிய அலுவல்கள் இருந்ததால்தான் அவர் பேசி முடித்தவுடன் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவுத் துறை செயலர், விஜய் கோஹ்லே மற்றும் அதிகாரிகள், மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இருபது இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட வழக்கில் 13 வயதுடைய சிறுவன்

Next Post

திருச்சி சமயபுரம் டோல்கேட் அகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 பேர் பலிருகே நின்று

Next Post

திருச்சி சமயபுரம் டோல்கேட் அகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து: 8 பேர் பலிருகே நின்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures