ஆசிய கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் நாடுகளுக்கு முக்கியமான தொடராக இருந்தாலும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறுவதால் பல நாடுகள் தயக்கம் காட்டி வந்தன.குறிப்பாக இந்திய அணி பங்கேற்குமா அல்லது புறக்கணிக்குமா என்ற சந்தேக கணைகள் தொடக்கம் முதலே உருவானது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய வளரும் நாடுகளுக்கான கிரிக்கெட் தொடரில் பாதுகாப்பது பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்திய அணியை அனுப்ப நாங்கள் தயாராக இல்லை” என அறிவித்துள்ளது
இதனால் ஆசிய வளரும் நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுது சிக்கலான விஷயம் தான்.