Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் தி.மு.க. சார்பில் சாலைமறியல்

January 24, 2018
in News, Politics, World
0
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் தி.மு.க. சார்பில் சாலைமறியல்

அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,000 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாயத்தில் நேற்று நடந்தது.

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு தி.மு.க. தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது, இந்த இயக்கம் இருந்தால் தங்களுடைய எண்ணங்களை, சதிகளை நிறைவேற்ற முடியாது என்று யார் யாரோ என்னென்னவோ சதிகளை எல்லாம் திட்டமிட்டு செய்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சதி வலையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் சேர்த்து நான் சொல்ல விரும்புவது, எப்படிப்பட்ட தீயசக்தியாக, எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும், யாராலும் இந்த திராவிட இயக்கத்தை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

இயக்கத்தை அழிக்க, ஒழிக்க நினைப்பவர்கள் எல்லாம் அழிந்தொழிந்த வரலாறு இருக்கிறதே தவிர, கழகம் என்றைக்கும் அழிக்க முடியாதது.

தி.மு.க. இன்றைக்கு ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும், விரைவில் ஆளும் கட்சியாகும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போது நான் எதிர்க்கட்சித் தலைவன். ஆட்சியின் தலைவராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், இரண்டையும் ஒன்றாகவே கருதி, இந்த நாட்டுக்காக உழைக்கும் உன்னதமான இயக்கம் தான் தி.மு.க.

அ.தி.மு.க.வின் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பறித்த வழக்கில் விசாரணை முடிவுற்று, விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது. எனவே இன்னும் ஒரு வாரகாலத்தில் நாம் எதிர்பார்க்கின்ற தீர்ப்பு நிச்சயம் வரப்போகிறது.

அந்தத் தீர்ப்பு வந்தவுடன், மாதக்கணக்கிலோ, வாரக்கணக்கிலோ அல்ல, நாட்கணக்கில் இந்த ஆட்சி கவிழப்போவது உறுதி.

மக்களுக்கு சேவை செய்யும் துறையான போக்குவரத்துத்துறையில் என்னதான் இழப்புகள் ஏற்பட்டாலும், எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டாலும், அதுபற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்த நேரங்களில், சிலமுறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், மக்கள் ஏற்கும் வகையில், அவர்களால் தாங்கக்கூடிய அளவில் தான் உயர்த்தி இருக்கிறோமே தவிர, யாருக்கும் தெரியாமல், முன்கூட்டியே அறிவிக்காமல், பலமடங்கு அதிகரித்ததில்லை.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி எப்படி நள்ளிரவில் உத்தரவிட்டாரோ, அதைவிடவும் கொடுமையாக இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ‘குதிரை பேர’ ஆட்சி இப்படி பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

உடனடியாக பஸ் கட்டண உயர்வை நீங்கள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், 27-ந் தேதியோடு தி.மு.க.வின் போராட்டம் நின்றுவிடாது. அடுத்து, 28, 29 ஆகிய தினங்களில் மறியல் போராட்டமாக, சிறை நிரப்பும் போராட்டமாக நிச்சயம் தொடரும் என்ற எச்சரிக்கையை தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Previous Post

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை முடிவடைந்தது

Next Post

லாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் இன்று தீர்ப்பு!

Next Post
லாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் இன்று தீர்ப்பு!

லாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் இன்று தீர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures