கூட்டு எதிரணியின் இன்றைய கூட்டத்துக்கு வரும் பஸ்களின் வீதிப் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது எனவும், போக்குவரத்துப் போலிஸாரினால் முடிந்தால் 1000 ரூபா தண்டப் பணமே அறவிட முடியும் எனவும் மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவ்வாறு பொலிஸார் தண்டப் பணம் விதிக்கும் பஸ்களுக்கு மாலையாகும் முன்னர் அதற்கான அபராதத் தொகையை வழங்க கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எந்த அச்சமும் இன்றி பஸ் உரிமையாளர்கள் தமது பஸ்களை நாளைய கூட்டத்துக்கு வர பயன்படுத்தலாம் எனவும் கூட்டு எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரசன்ன எம்.பி. கூறினார்.

