Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பஷிலின் வருகையை பகிரங்கமாக அறிவிப்போம் – சாகர காரியவசம்

June 28, 2021
in News
0
பசிலுக்கு உதவும், வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவின் தேசிய  அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் தினத்தை பகிரங்கமாக அறிவிப்போம். இரகசியமான முறையில்  அவர் ஒருபோதும் பாராளுமன்றம் வர மாட்டார்.  எதிர்க்கட்சியினருடனும், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவுடனும் டீல் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க் கொண்டுள்ள வேளையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்  கொண்டே எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எரிபொருள் விலையேற்றம் குறித்து  அன்று குறிப்பிட்ட விடயத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.    அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக இருக்கிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை தலைமைத்துவமாக கொண்டுள்ள  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பொதுன கூட்டணியில் ஒரு சில முரண்பாடுகள் காணப்படுகின்றன.  பல பங்காளி கட்சிகளை ஒன்றினைத்து  கூட்டணி அமைக்கும் போது  கருத்து முரண்பாடுகள்  தோற்றம் பெறுவது இயல்பு. முரண்பாடுகளுக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தையின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.

 

கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக  குறைப்பாடுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.  நாட்டு மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது  அதிக நம்பிக்கை  கொண்டுள்ளார்கள்.

மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கட்சிக்கு உண்டு; ஆகவே கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில்  தவறுகளை சுட்டிக்காட்டும் அதிகாரம் உண்டு.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பது குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் தற்போது குறிப்பிடப்படுகின்றன.  அவருக்காக தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை வழங்க  பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தயாராக உள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கும் தினம் பகிரங்கமாக அறிவிக்கப்படும்.  இரகசியமான முறையில் அவர் பாராளுமன்றம் வரமாட்டார் .  அதற்கான அவசியமும் கிடையாது.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நிழல் போல செயற்படுவதாக போலியான குற்றச்சாட்டுக்கள்  முன்வைக்கப்படுகின்றன.   ஐக்கிய மக்கள் சக்தியினருடனும்,    பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவுடனும் டீல் அரசியல் செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

புற்றுநோய் வருவதை தடுக்கும் உடற்பயிற்சி

Next Post

இலங்கை வீர்கள் மீது விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு

Next Post

இலங்கை வீர்கள் மீது விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures