இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், மிக மோசமான மின்னல் தாக்குதல்கள் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக பிரான்சை வாட்டி எடுத்த கடும் வெப்பம் இன்றோடு முடிவுக்கு வருகின்றது. 40°c வரை நீடித்த வெபம் தற்போது 32°c க்கு உள்ளாக குறைந்துள்ளது. ஆனால் அந்த மோசமான காலநிலையை தற்போது மழை ஆட்கொண்டுள்ளது. Météo France இன்று 17 மாவட்டங்களில் அடை மழை, மின்னர் தாக்குதல்கள் மற்றும் புயல்காற்று இடம்பெறும் என தெரிவித்து, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Gironde,
Landes,
Pyrénées-Atlantiques,
Lot-et-Garonne,
Dordogne,
Corrèze,
Haute-Vienne,
Creuse,
Cantal,
Puy-de-Dôme ,
Allier,
Haute-Loire,
Ardeche,
Drome,
Gard,
Vaucluse,
Bouches-du-Rhone
ஆகிய மாவட்டங்களில் கடும் மழை இடம்பெறும் எனவும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்படவும் வாய்ப்புகள் உண்டு எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

