Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு

November 12, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு

திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு நேற்று, நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர் திருமதி சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரி. பேரின்பநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரி. பேரின்பநாதன் ஆகியோர் சிறப்புரைகள்ளை ஆற்றினர்.

வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வராக் கல்லூரி நூற்றாண்டு விழா சிறப்பு மலரை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வெளியிட்டு வைக்க யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி ச. முகுந்தன் மற்றும் சைவ சித்தாந்தத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் த. செல்வமனோகரன் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடன ஆற்றுகையும், சேர். பொன். இராமநாதன் கட்புல ஆற்றுகைக் கலைகள் பீட மாணவிகளின் விசேட நாட்டிய, நடன நிகழ்வுகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

நிகழ்வில் சமயத் தலைவர்கள், பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

Next Post

என்ஜாய் | புதிய படம்

Next Post
என்ஜாய் | புதிய படம்

என்ஜாய் | புதிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures