Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்

December 18, 2021
in News, Sri Lanka News
0
கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வெறும் கோரிக்கையாக அமைந்துவிடக்கூடாது, அதேபோல் சுயநிர்ணய உரிமைக்காகவும், தேச விடுதலைக்காகவும்  செயல்படுபவர்களையும் போராடுபவர்களையும்  பயங்கரவாத பட்டியலில் சேர்த்து ஒடுக்கும் அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகள் தவிர்க்க  வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்களின் அறிக்கையில் மேலும் கூறப்படுவதானது,

“சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும்” என அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடலில் அமெரிக்க இராஜாங்கச் செயளாலர் அன்ரனி  கே.பிலிங்கன் கோரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களது அடையாளத்திற்கான இலக்கைவைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள் எனும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளமையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்பதோடு, இது வெறும் கோரிக்கையாகவோ, அரசியல் வாண வேடிக்கையாகவோ மட்டும் அமைந்து விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.

அதேநேரம் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுவோர் தாம் நேசிக்கும் மக்களின் விடுதலைக்காக ஒடுக்குமுறை  ஆட்சியாளர்களுக்கு எதிராகவும்  செயல்பட்டவர்கள் என்பதையும் அமெரிக்கா நேர்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுக்காக இராணுவ மற்றும் ஆயுத தளபாட ஒத்துழைப்புகளையும் அமெரிக்கா உட்பட அவர்களின் நேச நாடுகள் நிறுத்த வேண்டும்.

மேலும் சுயநிர்ணய உரிமைக்காகவும் ,தேச விடுதலைக்காகவும் செயல்படுபவர்களை,போராடுபவர்களை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து ஒடுக்கும் அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகள் தவிர்க வேண்டும். ஒடுக்கப்பவர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.

அதுமட்டுமல்ல இலங்கை உட்பட பல நாடுகள் அரசியல் ஒடுக்குமுறைகாகவும், இனவாத ,மதவாத இன அழிப்பிற்காகவும் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகும்.

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்து அதனை இது கால வரையிலும்  செய்யவில்லை. புதிய சட்டம் கொண்டுவருதாகவும் இல்லை. திருத்தங்களை செய்வதாக கூறி அதனையும்  மேற்கொள்ளவில்லை.

இது   சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல பயங்கரவாத செயலுமாகும். இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் ஒழித்தாலே அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும்.

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தனியே கைதிகள் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அமைப்பின் அரசியல் கொள்கை சார்ந்த விடயமாகும். அத்தகைய அரசியல் கொள்கை சுதந்திரத்திற்கும் தேச விடுதலை  செயற்பாட்டுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்.

தமது அரசியல் நலனுக்காக ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதை தடுத்தால் மட்டுமே விடுதலை செயற்பாடு கௌரவத்திற்குரியதாகும். அத்தோடு சுதந்திர கலந்துரையாடலுக்கும் வழிவகை உருவாக்கப்படுதலையும் உறுதி செய்யவேண்டும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அதிக வேகத்தில் பரவும் ஒமிக்ரோன்

Next Post

வைத்தியர் ஷாபிக்கு எதிராக கருத்துக்கூறிய அத்துரலியே ரத்ன தேரர்

Next Post
வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

வைத்தியர் ஷாபிக்கு எதிராக கருத்துக்கூறிய அத்துரலியே ரத்ன தேரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் பயண இலக்கும் மாற்றமடையவில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

May 13, 2025
செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

May 13, 2025

Recent News

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் பயண இலக்கும் மாற்றமடையவில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

May 13, 2025
செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

May 13, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures