Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

December 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டம்!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம், கடந்த 2021 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இன்று குறித்த வழக்கிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அஹ்னாப் ஜெஸீம் மீதான குற்றச்சாட்டு

சிறுவர்களுக்கு தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவித்ததாகவும், அவரது இலக்கியப் பணியின் மூலம் தீவிரவாதத்துக்கு உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை! | Poet Ahnaf Detained Under Pta Acquitted Sl

‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜெஸீமுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேவ் த பேர்ள் அமைப்பு

சேவ் த பேர்ள் எனப்படும் முத்துக்களை காப்பாற்றுவோம் சிறுவர் அமைப்புனுடன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் குற்றம் சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை! | Poet Ahnaf Detained Under Pta Acquitted Sl

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் தமக்கு தொடர்பிருந்ததாக ஒப்புக் கொள்ளுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Previous Post

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Next Post

இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

Next Post
எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் | அரசாங்கம்

இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures