Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பனியால் சூழ்ந்த டெல்லி | விமான, ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

January 19, 2024
in News, World, முக்கிய செய்திகள்
0
பனியால் சூழ்ந்த டெல்லி | விமான, ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

இந்தியாவின்  தலைநகரான புதுடெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமானம் மற்றும் ரயில்  சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில்  வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்துள்ளது.

ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 120 விமானங்கள் மிகவும் தாமதாக இயக்கப்பட்டன. அதேபோல 53 விமானங்கள் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டன.

ரயில் சேவையை பொறுத்த வரையில் மொத்தமாக 20 ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி தவிர கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாகிஸ்தான் பதில்தாக்குதல் | ஈரானில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்தது

Next Post

சடலங்களை தகனம் செய்ய பண மோசடியிலீடுபட்ட மாத்தளை மாநகர சபையின் பெண் ஊழியர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

சடலங்களை தகனம் செய்ய பண மோசடியிலீடுபட்ட மாத்தளை மாநகர சபையின் பெண் ஊழியர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures