Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!

January 23, 2018
in News, World
0

அமேசான் நிறுவனமானது பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் கோ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அமேசான் நிறுவனம் சூப்பர் மார்க்கெட்டை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

இங்கு வாங்கும் பொருட்களுக்கு வரிசையில் நின்று பில் போடும் அவசியம் இல்லை. சூப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா மற்றும் சென்சார்கள் வாடிக்கையாளரை அடையாளம் கண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் திரும்ப வைக்கும் பொருட்களை பதிவு செய்யும்.

பின்னர் அவர்கள் வெளியே செல்லும்போது பொருட்களுக்கான தொகை கணக்கிடப்பட்டு அவர்களின் கிரெடிட் கார்டில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

முன்னதாக அமேசான் கோ சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்துக்கு சென்று, ஸ்மார்ட்போனில் அமேசான் கோ என்ற செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ‘கியூ ஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்காக சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்

Next Post

பிரான்சில் ஒன்று திரளும் கணினி ஊடுருவல் நிபுணர்கள்

Next Post

பிரான்சில் ஒன்று திரளும் கணினி ஊடுருவல் நிபுணர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures