படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மொனராகலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

