Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணத்தை கூற முடியும் | பொலிஸார்

March 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பத்தினர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிஸார் நேற்று (11) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (7) காலை கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியிருந்தது.

இதன்போது சிவபாலசுந்தரம் கௌசிகன் (42), அவரது மனைவி கௌசிகன் வரதராஜினி (36) மற்றும் மகள்களான கௌசிகன் மைதிரா (9), கௌசிகன் கேசரா (3) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை கடந்த புதன்கிழமை (8) இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்துக்கான காரணம் வெளிப்படவில்லை என்றும் ஆனால், அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அந்த நான்கு பேரும் உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடற்கூறுகள் மற்றும் இரத்த மாதிரிகள் பகுப்பாய்வு அறிக்கைக்காக அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பரிசோதனை முடிவுகள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அவ்வறிக்கை கிடைத்த பின்னரே மரணத்துக்கான காரணத்தை கூற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, அதனூடாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

Previous Post

வைகோவுடன் திருமாவளவன் சந்திப்பு – இலங்கை தமிழர் தொடர்பான சர்ச்சை பேட்டி குறித்து நேரில் விளக்கம்

Next Post

மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

Next Post
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

மாணவியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபர் தப்பியோட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures