அரசியலில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
இத்தனை நாளும் டுவிட்டர் ஊடாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த கமல், இன்று காலை 5 மணிக்கு (சனிக்கிழமை) எண்ணூர் துறைமுகம், கழிமுக சாம்பல் குளம், உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள மக்களுடனும் நீரில் சாம்பலை கலப்பதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந் நிலையில், நேற்றைய (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பதிவில், வடசென்னைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.