கேரளா கஞ்சா பொதிகளுடன் எட்டு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து மீனவர்களை கைது செய்து அவர்களின் படகினை கைப்பற்றினார்கள் .
அதன் போது படகில் இருந்து 117 கிலோ கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளினையும் மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.