Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு ; மாணவன் மாயம்!

June 30, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

பல பிரதேசங்களில் நேற்று (29) பதிவான நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 வயது மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடக்கு படகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலுள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

கொழும்பு 09, தெமட்டகொடையைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்ததாகவும், அந்தக் குழந்தை பல குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீராடும்போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  

குழந்தையானது அதன் தந்தையால் ஜா-எல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மாங்குளம் நீர்த்தேக்கத்தில் 5 மாணவர்களுடன் நீராடச் சென்ற மாணவனொருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன மாணவர் திருமுறிகண்டி – மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் ஆவார்.

மேலும், வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலான பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் அலையில் அள்ளுண்டு காணாமல்போன நிலையில், நேற்று சனிக்கிழமை (29) இரவு அவரது சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் றம்பொடை, வெதமுல்லவத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.

Previous Post

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது 

Next Post

யானையைக் கண்டு பயந்து முச்சக்கரவண்டியை திருப்ப முயன்ற சாரதி வேனில் மோதி பலி!

Next Post
யானையைக் கண்டு பயந்து முச்சக்கரவண்டியை திருப்ப முயன்ற சாரதி வேனில் மோதி பலி!

யானையைக் கண்டு பயந்து முச்சக்கரவண்டியை திருப்ப முயன்ற சாரதி வேனில் மோதி பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures