Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கண்டித்து வடக்கில் பணி பகிஷ்கரிப்பு

July 23, 2017
in News
0

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து வடமாகாணத்தில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் நாளை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். நல்லூர்ப் பகுதியில் வைத்து நேற்று மாலை நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விடயத்தைக் கண்டித்தே, வட மாகாணத்திலுள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அந்த சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை கண்டிக்கின்றோம்.

நீதித்துறைக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

நீதிபதி மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

அதனை கண்டித்து நாளை வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களாகிய நாம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தாது பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

இதன்போது, வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட சங்கங்கள் அனைத்தையும் எம்முடன் இணைந்து அன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கண்ணீர் விட்டழுத நீதிபதி இளஞ்செழியன்!

Next Post

இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல

Next Post
இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல

இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures