Monday, August 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிதியும் திறமையும் கொண்ட உலகின் பெரும் புலம்பெயர் அமைப்பு இலங்கைத் தமிழர்களே | இரான் விக்கிரமரத்ன

November 11, 2021
in News, Sri Lanka News
0
நிதியும் திறமையும் கொண்ட உலகின் பெரும் புலம்பெயர் அமைப்பு இலங்கைத் தமிழர்களே | இரான் விக்கிரமரத்ன
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும். எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10), ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடாக இன்று பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது, இன்றுள்ள சவால்களில் ஜனாதிபதியினால் கொவிட் சவால்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது. ஏனைய சகல சவால்களும் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவையாகும்.

செயலணிகளை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதாக அரசாங்கம் ஒரு சித்திரத்தை காட்டி வருகின்றது. கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த செயலணி ஒன்றை உருவாக்கினர்.

அத்தியாவசிய பொருட்களை பங்கிடும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது,வறுமை ஒழிப்பை மேற்கொள்ள வேறொன்று, பொருளாதார மீள் எழுச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என ஒரு செயலணி உருவாக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் சட்டம் இயற்ற இப்போது புதிதாக ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செயலணிகள் ஒரு பக்கமும் சட்ட நிறுவனங்கள் இன்னொரு பக்கமும் இயங்கிக்கொண்டுள்ளன. இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் மக்களின் வரிப்பணமே செலவழிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல செயலணிகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் குறித்து எம்மத்தியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவர்கள் செயலணிகளுக்கு தகுதியானவர்களா என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கு உதவி செய்ததற்காக இவ்வாறு செயலணிகளுக்கு இவர்கள் நியமிக்கப்படுகின்றார்களா என்ற கேள்வியையே கேக்கவேண்டியுள்ளது.

செயலணிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றால் அமைச்சரவைக்கு இருக்கும் பொறுப்புகள் என்ன?

இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நாட்டில் பரப்பியுள்ளனர். இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துவதை நாம் நிராகரிக்க வேண்டும்.

சகல இனத்திலும் ஒரு சிறிய குழு இனவாதத்தை பரப்புகின்றது, ஆனால் அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப் படுத்தினாலும் பெரும்பாலான தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே உள்ளனர். எனவே புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் உயரிய கல்வி மட்டத்தில், திறமையான, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். அவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும், எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது, இது எங்கு சென்று முடியும் என தெரியவில்லை, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு இரங்கி போராடும் நிலைமை உருவாகும். இவை அனைத்துமே இயற்கையாக உருவான பிரச்சினை அல்ல, தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளே எம்முன் உள்ளது.

எனவே இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதனை கருத்தில் கொண்டு பொருத்தமான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

3 சிறுமிகளும் வீட்டிலிருந்து வெளியேறியமைக்கான காரணம் வெளிப்பட்டது !

Next Post

ஆசிரியர் – அதிபர் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்க 30000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Next Post
தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

ஆசிரியர் - அதிபர் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்க 30000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி | ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

August 4, 2025
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

August 4, 2025
மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

August 4, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சி.ஐ.டி.யில் முன்னிலை!

August 4, 2025

Recent News

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி | ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

August 4, 2025
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

August 4, 2025
மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

மது போதையில் இ.போ.ச பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு விளக்கமறியல்!

August 4, 2025
அர்ச்சுனாவின் எம்.பி பதவி: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சி.ஐ.டி.யில் முன்னிலை!

August 4, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures