Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

நாளை முதல் சிற்றுண்டிச் சாலைகளில் உணவு வசதிகள் இல்லை

March 16, 2022
in Cinema, News
0
நாளை முதல் சிற்றுண்டிச் சாலைகளில் உணவு வசதிகள் இல்லை

சமையல் எரிவாயு இல்லாமை காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில்  உணவு வசதிகளை நாளை முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டுவரும் பிரதான இரண்டு நிறுவனங்களும் தங்களின் கைவசம் இருந்த தொகை முடிவுற்றுள்ளதால் சமையல் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக தெரிவித்திருக்கின்றன. இதன் காரணமாக பாரியதொரு  நெருக்கடிக்கு சிற்றுண்டிச்சாலைகள் முகம்கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது.

குறிப்பாக சிற்றுச்சாலைகளை மூடிவிடவேண்டிய நிலை ஏற்பட்டால் சுமார் 5 இலட்சம் பேரின் தொழில் இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது. அதனால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மற்றும் அதில் பணி புரிகின்ற ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வொன்றை வழங்கவேண்டும்.

இல்லாவிட்டால் நாடுபூராகவும் அமைந்திருக்கும் சிற்றுண்டிச்சாலைகளின் பீங்கான் பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி காரியாலயத்துக்கு முன்னால் வந்து கூடாரம் அமைப்போம்.

அத்துடன் சாதாரண சிற்றுண்டிச்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று அல்லது ஐந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. சிற்றுண்டிச்சாலைகளில் மேலதிக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாத காரணத்தினால் இன்று முதல் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை மேற்கொள்ள முடியாது. அதனால் சிற்றுண்டிச்சாலைகளை மூடிவிடவேண்டி ஏற்படுகின்றது என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

நாட்டில் ஒரே ஒரு கொரோனா மரணம் பதிவு

Next Post

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் நிதியமைச்சர் பஷில்

Next Post
இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் நிதியமைச்சர் பஷில்

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் நிதியமைச்சர் பஷில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures