Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு

September 11, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக 2019 இல் இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சுமார் ரூ. 2 மில்லியன் மதிப்பிலான மின்சாரம், தனியார் இல்லம் ஒன்றில் நடந்த திருமண நிகழ்வுக்காக 1.5 கிலோமீற்றர் வீதியை ஒளிரவைத்ததற்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் 

இது அன்றைய மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உத்தரவின்படியும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் வேண்டுகோளின்படியும் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு | Petition 2 Mn Electricity Use Namal Wedding

பின்னர், திருமணத்துடன் தொடர்பில்லாத Royalco Aqua Culture (Pvt) Ltd எனும் தனியார் நிறுவனம் மின்சார கட்டணத்தைச் செலுத்தியதாகவும் செய்ததாகவும் தெரியவந்தது.

அதன்படி, மனுதாரர், இந்த செயல் அரசாங்க அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் என வாதிட்டுள்ளார்.

விசாரணை திகதி

அத்தோடு, மின்சார சபையின் பிரதிநிதிகள், தங்களுக்கு கிடைத்த உத்தரவுகளை மட்டுமே பின்பற்றியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எந்த பற்றுச்சீட்டும் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு | Petition 2 Mn Electricity Use Namal Wedding

இந்த நிலையில், அரசியலமைப்பின் 12(1) ஆம் பிரிவின் கீழ் மனுவைத் தொடர அனுமதி வழங்கிய நீதிமன்றம், அடுத்த விசாரணையை 2026 மார்ச் 17 அன்று நடத்த தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் நாமல் ராஜபக்ச திருமண மின்சாரச் செலவினம் தொடர்பான வழக்கு சட்டரீதியாக முழுமையான விசாரணைக்கு நகர்ந்துள்ளது.

Previous Post

ஒரு போதும் விலக மாட்டேன்.! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures