Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 11 வயதுடைய சிறுவன் உட்பட 6 பேர் பலி

December 10, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி – நாரமல்ல பிரதேசத்தில்  வீதி ஓரத்தில் சென்ற சிறுவன் மீது கார் மோதி இடம்பெற்ற விபத்தில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டிய – நாரமல்ல  பிரதான வீதியின்  பொஹிங்கமுவ  பிரதேசத்தில்  நாரமல்ல இருந்து குளியாப்பிட்டி நோக்கி பயணித்த கார் வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த சிறுவன் மற்றும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த சிறுவன் 11 வயதுடைய யாகரவத்த, கிதலவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா பஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட பாதசாரி ஒருவர்  மீது  பஸ்  மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதுடைய சாந்திபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மேலும், எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 41 வயதுடைய  தம்பகல்ல, மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவராவார்.

இதேவேளை, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பெரியதுத்துவரம் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில்  மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 27 வயதுடைய திருக்கோயில்  பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.

அத்துடன், இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் படுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர்  இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதுடைய நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெல்லவாய – தனமல்வில வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரமாக நின்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோதி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த வேன் சாரதி உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர் 63 வயதுடைய குட்டிகல –  பதங்கல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

விபத்து சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

பெண்களின் மோட்டார் சைக்கிள்களை இலக்கு வைத்து திருடிய பொலிஸ் பரிசோதகரின் மகன் கைது!

Next Post

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி வழங்க புதுடில்லி தீர்மானம்!

Next Post
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி வழங்க புதுடில்லி தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures