Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு ஏழையாக மாறும்போது மக்களும் ஏழைகளாக மாறுவது தவிர்க்க முடியாதது – அநுர

November 8, 2019
in News, Politics, World
0

ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று   மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “ பெரும்பாலான நாடுகளில் ஒரு ஆட்சியாளர் நியமிக்கப்பட்டால் அவரை கேள்வி கேட்க மக்களுக்கு முழு உரிமை வழங்கப்படுகின்றது.

அதேபோன்றதொரு கலாச்சாரத்தை இலங்கையிலும் உருவாக்க வேண்டும். ஒரு நாடு ஏழையாக மாறும்போது அந்த நாட்டிலுள்ள மக்களும் ஏழைகளாக மாறுவது தவிர்க்க முடியாதது.

எனவேதான் எனது பொருளாதாரத் திட்டம் ஒரு நாட்டை எவ்வாறு வளப்படுத்துவது மற்றும் வறுமையில் வாடும் மக்களை எவ்வாறு விடுவிப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

இதேவேளை இலங்கையில் கல்வியில் புதிய மாற்றம் தேவை அதற்கானதொரு திட்டமும் எம்மிடம் உள்ளது.

மேலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் 52% மக்கள் 5 ஆண்டுகளுக்குள் குறைந்தது 80% போக்குவரத்தைப் பெற வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் -கபே

Next Post

சமஷ்டி பற்றி யாரும் பேசவில்லை சஜித் தடாலடி

Next Post

சமஷ்டி பற்றி யாரும் பேசவில்லை சஜித் தடாலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures