Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாடாளுமன்றைக் கலைக்கத் தயார்- மைத்திரிபால!!

June 11, 2018
in News, Politics, World
0

தற்­போது நாடா­ளு­மன்­றத்தை அரச தலை­வ­ரால் கலைக்க முடி­யாது. நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும் பான்மை நாடா­ளு­மன்ற உறுப் பி­னர்­க­ளின் விருப்­பத்­து­ட­னேயே அத­னைக் கலைக்­க­லாம்.

நாடா­ளு­மன்­றம் இப்­போ­தி­ருக்கின்ற நிலை­யி­லேயே இணைந்து செயற்­ப­டு­வதே சரி­யா­ன­தா­கும். உள்­ளக ரீதி­யில் அனைத்­துக் கட்­சி­க­ளுக்­கும் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இது நாட்­டின் எதிர்­கா­லத்­தைப் பாதிக்­கும். நாட்டை நேசிக்­கும் அனை­ வ­ரும் அந்த நெருக்­க­டி­களை மறந்து நாட்­டுக்­காக இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்­டும். நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப்பது என்­றால் பெரும் பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் விருப்­பத்­து­டன் கலைத்து தேர்­த­லுக்கு செல்­ல­வேண்­டும்.

இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். சிங்­கள ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,ஊழல்­வா­தி­க­ளும் ஊழல்­வா­தி­களை காப்­பாற்­று­ப­வர்­க­ளும் எனக்கு எதி­ரா­க­வும், எனது பிள்­ளை­க­ளுக்கு எதி­ரா­க­வும் அர­சி­யல் சேறு­பூ­சல்­க­ளைச் செய்­கின்­ற­னர். சமூக இணை­ய­த­ளங்­கள், இலத்­தி­ர­னி­யல் ஊட­கங்­கள், அச்சு ஊட­கங்­கள் போன்­ற­வற்­றி­னால் எனக்கு எதி­ராக தெரிந்தோ தெரி­யா­மலோ சேறு­பூ­சப்­ப­டு­கின்­றது.

அரசு என்ற ரீதி­யில் நூறு­நாள் வேலைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாடா­ளு­மன்­றத்­தில் 47 உறுப்­பி­னர்­களை வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­ச­மைப்­புத் திருத்­தம், புகை­யி­லைச் சட்­டம், சுகா­தார கொள்கை போன்ற விட­யங்­க­ளைச் செய்­ய­வேண்­டி­யி­ருந்­தது. அன்று அவை அனைத்­தை­யும் நாங்­கள் சுதந்­தி­ரக்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்றே செய்­தோம்.

இன்று அவற்றை மறந்­து­விட்­ட­னர். நினைவு இருந்­தா­லும் அவ்­வாறு எது­வும் நடக்­க­வில்லை என்ற தோற்­றத்தை காட்ட முயற்­சிக்­கின்­ற­னர்.

நான் சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பொறுப்­பேற்­ற­தால் பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டன எனக் கூற சிலர் முற்­ப­டு­கின்­ற­னர். நான் சுதந்­தி­ரக் கட்­சியை பொறுப்­பேற்­ற­தன் கார­ண­மா­கவே நூறு­நாள் திட்­டத்­தின் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடிந்­தது.

நூறு நாள் திட்­டம் எனக்­குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை என்று கூற­வில்லை. இதனை யார் செய்­தது என்று எனக்­குத் தெரி­யாது என்றே கூறி­னேன். சில ஊட­கங்­க­ளும் எனது எதி­ரி­க­ளும் இத­னைத் திரி­பு­ப­டுத்தி வெளி­யிட்­ட­னர். இது எனக்­குத் தெரி­யாது என்று கூறி­ய­தாக செய்தி வெளி­யிட்­ட­னர்.

நூறு­நாள் திட்­டத்தை உரு­வாக்­கி­யது யார் என்று எனக்­குத் தெரி­யாது என்றே நான் கூறி­னேன். நாங்­கள் அத­னைச் செயற்­ப­டுத்­தி­னோம். ஆனால் உண்­மை­யி­லேயே அதனை செயற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

நான் அரச தலை­வ­ரா­கி­ய­வு­டன் நாடா­ளு­மன்­றத்தை கலைத்­தி­ருக்க வேண்­டும். அப்­ப­டிச் செய்­தி­ருந்­தால் இன்­றைய எந்­தப் பிரச்­சி­னை­யும் இருந்­தி­ருக்­காது. புதிய கட்­சி­க­ளும் வந்­தி­ருக்­காது – என்­றார்.

‘பிணை­முறி ஆணைக்­குழு நிய­ம­னத்­து­ட­னேயே உங்­க­ளுக்கு எதி­ரான நெருக்­க­டி­கள் உரு­வா­கின. அப்­படி செய்­தி­ருக்­கா­வி­டின் நீங்­கள் இனி­மை­யான வாழ்க்கை வாழ்ந்­தி­ருக்­க­லாம். இது தொடர்­பில் உங்­கள் கருத்து?’ என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, யார் தனிப்­பட்ட ரீதி­யில் எனக்­குத் துரோ­கம் செய்­தா­லும் அவ­மா­னப்­ப­டுத்­தி­னா­லும் நான் செய்­தது சரி. அது நாட்­டுக்­கா­கச் செய்த விட­யம்.

நீங்­கள் கூறு­வது போன்று இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­தி­ருந்­தால் எனக்கு எந்த நெருக்­க­டி­யும் ஏற்­பட்­டி­ருக்­காது. எனக்­கும் எனது குடும்­பத்­துக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் எந்த அவ­மா­ன­மும் செய்­தி­ருக்க மாட்­டார்­கள். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் நாட்­டுக்­காக நான் செய்­ய­வேண்­டி­யதை நான் செய்­தேன். நான் எனக்கு வரு­கின்ற எந்­தப் பிரச்­சி­னை­யை­யும் நாடு என்ற இடத்­தி­லி­ருந்தே பார்ப்­பேன். இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தன் ஊடா­கவே என்­னைப்­ப­பற்றி தவ­றான விட­யங்­களை முன்­வைத்து சிலர் விமர்­சிக்­கின்­ற­னர், என்று பதி­ல­ளித்­தார்.

Previous Post

வீடில் சரியான கவனிப்பு இல்லை : சவப்பெட்டியுடன் வந்த நபர்

Next Post

கோவில் திருவிழாவுக்கு சேலை வாங்காததால் விபரீத முடிவெடுத்த மாணவி

Next Post

கோவில் திருவிழாவுக்கு சேலை வாங்காததால் விபரீத முடிவெடுத்த மாணவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures