Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடளாவிய ரீதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள்

January 23, 2019
in News, Politics, World
0

ஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை வங்கிசேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

குறித்த போராட்டங்கள், கேகாலை, பதுளை, அப்புத்தளை, எட்டம்பிட்டிய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாத்தளை, ஹட்டன், மத்துகம, மட்டக்களப்பு, தலவாக்கலை, ராகல,நுவரெலியா, தெல்தோட்டை, இரத்தினபுரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

இதேவேளை ருகுணு ஜயவர்த்தனபுர, தென்கிழக்கு, சப்ரகமுவ, கிழக்கு ரஜரட, களனி, வடமேல் மற்றும் பேராதனைப் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு முன்னாலும் போராட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘ஆயிரம் இயக்கம்’ என்ற பெயரில் இப்போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழர்களின் நிலங்களை தாரைவார்க்க சீ.வி சதித்திட்டம்

Next Post

தமிழர்களுக்கு ஆலோசனை வழங்கிய : மட்டக்களப்பு அரசாங்க அதிபர்

Next Post

தமிழர்களுக்கு ஆலோசனை வழங்கிய : மட்டக்களப்பு அரசாங்க அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures